Tuesday, February 21, 2006

காலம்...



கண்மூடித் திறப்பதற்குள்
களவாடப் பட்டு விட்டது
வாலிபம்

கருத்திலிருந்து விலகாது
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கண்கள் மூடாது

கடந்து கொண்டுதானிருக்கிறது
காலடிகளைப் பதித்த வண்ணம்
காலம்

புகை பிடித்தல்...



கடைசியில் வைக்க வேண்டிய
கொள்ளி

இப்போது
தானே தன் வாயில்

கலிகாலம்

Monday, October 03, 2005

பாரதியின் அக்கினி குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

-மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்


பாரதியின் இக் கவிதை ஏற்றிவைத்த சுடரை அழியாது காத்திடவிருப்பம்
அதனாலேயே தழல் வீரம் ஆரம்பம்